web log free
October 18, 2025

போராட்டத்தை கைவிட்ட  தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம்

இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தமது போராட்டத்தை கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (15) நள்ளிரவு முதல் எரிபொருள் போக்குவரத்தில் இருந்து விலகுவதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது.

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக போக்குவரத்து கட்டணத்தை 60% அதிகரிக்குமாறு விடுத்த கோரிக்கைக்கு உரிய பதில் கிடைக்காத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் இணைச் செயலாளர் டி.வி.எஸ்.சில்வா தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும் அவர்கள் முன்னெடுத்த போராட்டத்தை கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd